11-மே-2011
இஸ்லாம் காட்டிதந்த வாழ்வியல் நெறியை கடைபிடிக்கவும், இன்றைய சமூகத்தில் நடைபெறும் சீர்கேட்டை அகற்றும் வழிமுறைகள் பற்றியும், ஒரு குடும்பத்தை இஸ்லாமிய ரீதியாக நடத்திச் செல்வது பற்றியும், தனி மனித வாழ்வில் மாற்றம் கொண்டு வருவது மற்றும் அதன் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வருதல் போன்ற விஷயங்களை போதிக்கும் முகமாக இஸ்லாத்தை அறிவோம் என்ற பயிற்சி முகாமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழகம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக காரைகாலில் வருகின்ற 22.5.11 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 4.30 க்கு காரைகால் காமராஜர் சாலையில் உள்ள ஷமீரா மகாலில் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு ஈருலக பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம். பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.
காரைகாலில் இந்நிகழ்ச்சி சம்பந்தமாக தொடர்ப்பு கொள்ள 99949 46364 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக